Tuesday, September 1, 2015

வெற்றி பெற வழி :

வெற்றி பெற வழி :

தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் தராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இதுவே வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரம்.

ஏதோ சந்தர்ப்பவசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது . அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை . அப்போது இயன்ற வரையில் நான் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து , நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும் படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?

அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது . பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அவை கிடைக்கும் சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காக கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே , எந்த காலத்திலேயே, எந்த நோக்கத்தோடு , எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே விளையும் வரும். வெற்றியும் வரும் .

---அருள்தந்தை

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment