Saturday, September 19, 2015

இறைநிலை அறிவு :

இறைநிலை அறிவு
பகுதி : 1 - மனிதனும் இறைநிலையும்
மனித இன வாழ்வு மிகவும் மதிப்புடையதாகும். ஏனெனில் மனிதனால் தான் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற சடப்பொருள்கள் பற்றியும், உணர்ச்சி அனுபோகங்களாக உணரக் கூடிய பருவுடலைப் பற்றியும், சிந்தனையும் ஆராய்ச்சியும் செய்ய முடியும். மேலும் காந்த ஆற்றலின் சிறப்பியக்கத் தத்துவமாகிய ஆன்மாவெனும் கருமையத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள மனிதனால் மட்டுமே முடிகிறது.
மனிதனில் அடங்கியுள்ள கருமையத்தில்தான் பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தும் அலை வடிவில் சுருங்கியுள்ளன. அவை எப்போதும் அழியாத வளமுடையனவாகவும், வியப்புக்குரியனவாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருட்களாகவும் உள்ளன. இறைநிலையென்னும் மூலப்பொருள்தான் பிரபஞ்சமாக மலர்ந்து உள்ளது. தத்துவஞான ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களும் இறைநிலையென்ற பேராற்றலை நோக்கியே அனைத்து வழியிலும் தங்கள் தங்கள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மனித இனம் தோன்றி எவ்வளவு காலம் சென்று விட்டதோ, அக்கால முழுமையும் இன்று வரையிலும் இறைநிலையைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் வருகின்றது. எனினும் தத்துவம், விஞ்ஞானம் எனும் இரண்டு துறைகளிலும் இன்னமும் எவரும் இறைநிலை விளக்கத்தை முழுமையாக ஐயமின்றித் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களால் பிறருக்குத் தெரிவிக்கவும் முடிய வில்லை. இந்த வழுக்கல் ஏன்? இதை அறிந்து நாம் தெளிவு பெறவும், மற்றுமுள்ள, வயதாலும் சிந்தனையாற்றலாலும் இறைநிலையை உணரத் தகுதியுடைய எல்லோரும் உணர்ந்து கொள்ளச் செய்யவும் முயல்வோம். இந்த அருள் தொண்டில் வெற்றி பெறுவோம்.
இறைநிலையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தே எல்லா வழுக்கல்களுக்கும் காரணம். உண்மையில் இறைநிலையே பிரபஞ்சமாக தன்மாற்றம் (Transformation) அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைநிலை வேறாகவும், பிரபஞ்சப் பொருட்கள் வேறாகவும் இருக்கின்றன என்பதே தவறான கருத்து ஆகும். எந்த ஒரு தோற்றமும், நிகழ்ச்சியும் இறையாற்றலின் பகுதியே ஆகும்.
முதல் விளக்கமாக இறைநிலையை சில அடையாளங்களோடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐம்புலனறிவோடு இயங்குகின்ற மனிதர்கட்கு இறைநிலையைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் எளிதில் பிடிபடா. என்றாலும், ஆறாவது அறிவு நிலையில் முதிர்ச்சியடைந்தவர்கள் பயிற்சியினால் இறைநிலையோடு கலந்து அதன் உண்மை நிலைகளை உணர முடியும்; உணர்ந்தும் உள்ளார்கள். அந்த அனுபவங்களை அடையாளங்களாகக் காட்டி மற்றுமுள்ள மனித குலத்திற்கு அந்த அருட்பேராற்றலைப் பற்றி விளக்குவது எளிதேயாகும்.
சாதாரனமாக மனிதருக்குள் அறிவு ஆராய்ச்சி நிலையில் சில வழுக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஆறாவது அறிவு இயங்கவில்லை என்றோ, குறைவாக உள்ளது என்றோ கருத்து அன்று. அறிவின் கூர்மையும், நீடித்த சிந்தனையும் மறைபொருட்களை ஆராய்வதற்கு மிகவும் அவசியம். எந்தப் பொருளைப் பற்றி உணர வேண்டுமானாலும் அந்தப் பொருளைவிட நுண்ணிய நிலையில் அறிவு இயங்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான உளப்பயிற்சி அகத்தவம் ஆகும்.
வேதாத்திரி

மெளன காலம் :

மெளன காலம்

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- அருள்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

சாந்தியோகம்:



சாந்தியோகம்:..

இந்த மையம் முதுகந்தண்டின்
(spinal cord) அடிப்பகுதியாகும்.
ஆசனவாய்க்கு மேலே உள்ள பால்
உணர்வுச்சுரப்பியை (sexual gland)
இது குறிக்கும்..எனவே, மூலாதாரத்தில்
நின்று தவம் இயற்றும்போது,
அதாவது அந்த இடத்தில் அதாவது
உடலின் உள்ளே(முன்புறமோ, பின்புறமோ)
நினைவை செலுத்தி தவம் இயற்றவேண்டும்.


இதற்கு சாந்தியோகம் என்று பெயர்.
முதுகந்தண்டின் அடிப்பகுதியில்,
ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் உயரே
மனதை குவிக்க வேண்டும். அப்போது
சாந்தியோகம் எளிதில் பிடிபடும்.
இது மிகவும் முக்கியமானது.
.

வேக வாகனத்தை இயக்க கற்றுக்
கொடுக்கும்போது ஆக்ஸிலரேட்டரை
அழுத்தக் கற்றுத்தருபவர், கூடவே
பிரேக்கையும் காட்டிக்கொடுத்து,
அதன் மதிப்பையும் உபயோகத்தையும்
சொல்லித்தருவார். அதுபோல்,
உயிராற்றலை ஆக்கினைக்கும்,
அதற்கும் மேலேயும் தூக்கி,
நிறுத்திப்பழகுதல்தான் தன்னிலை
விளக்கத்தையும் ஆன்மீக உயர்வையும்
தரும், என்றாலும், தவக்கனல் பல
காரணங்களால் கட்டு மீறுகின்றபோதும்,
வேறு சில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை
அதனது பழைய இடத்திலேயே
நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.
.

இந்த சாந்தியோகம் என்னும்
மூலாதாரத் தவத்தை ஆரம்ப காலத்தினர்
அறிந்திருக்கவில்லை. அதனால்
முற்காலத்தில் தவமியற்றுதல்
என்பது உயிருக்கே ஆபத்தான
காரியமாக இருந்திருக்கிறது. பிரமை,
பைத்தியம் போன்ற கொடிய
வியாதிகளும் நேர்ந்திருக்கின்றது.

ஆனால் இப்போது அந்த பயம்
சற்றும் கிடையாது.யோக சாதனையின்
அதீத த்தின் (Exess) காரணமாகவோ,
உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின்
காரணமாகவோ அல்லது கோள்களின்
நிலை காரணமாகவோ, தவக் கனல்
மிகுந்தால் , அதை உடனடியாக
உணர்ந்து தணித்துக்கொள்ளவும்,
அந்த தவக்கனலின் அதீதத்தை(Exess)
உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக்கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது
.

.
“தவவேகம் உடல்பலத்தை மீறும்போது
தணித்திடவும் வழியுண்டாம், அதைக்காணாமல்,

சிவநிலையை அடைவதற்குத் தவமிருந்து,
சித்தியடை யாமுன்னம் கனல் மிகுந்து

சவநிலையை அடைந்தார் முன்னாளில் பல்லோர்
சற்றுமிப்போ தந்தபயம் இங்கே இல்லை;

நவயுகத்திற் கேற்றபடி, வாழ்க்கை ஊடே
“நான்” என்னும் நிலையறியும் மார்க்கம் ஈதாம்.”
.

.
மூலாதாரத்திலிருந்து உணர்வு
மெலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய
உயிராற்றலானது சில சூழ்நிலைகளுக்கு
உள்ளாகும்போது, சிதைவையும்,
இழப்பையும்(Damage) ஏற்கவேண்டிவரும்.
அவை; மாதவிலக்கில் இருக்கும்
பெண்களின் அருகாமை, நாயின்
அருகாமை, பன்றியின் அருகாமை
மற்றும் பிணத்தின் அறுகாமை.
.

தவிர்க்க முடியாத காரணத்தால்
இந்தச்சூழ்நிலைகள் ஏதேனும்
ஒன்றில் இருந்தே ஆகவேண்டும்
என்றநிலை ஏற்பட்டால், அப்போது
உடனே சாந்தியோகத்தில் இறங்கிவிட
வேண்டும்., உணர்வை ஆக்கினையில்
வைக்காது மூலாதாரத்திற்கு
இறக்கிவிடவேண்டும். அப்போது
நாம் எந்த இழப்புக்கும் உள்ளாகமாட்டோம்.
மாதவிலக்கில் இருக்கும் பெண்டிர்
சமைத்த உணவை உண்ண வேண்டிய
தவிர்க்க முடியாத கட்டாயம் நேர்ந்தால்,
அப்போது கூட , இறங்குபடியில்
இருந்துகொண்டுதான் உண்ணவேண்டும்.
அப்போதுதான் உயிராற்றலின்
இழப்பிலிருந்து தப்பலாம்.
.

.
மேலே சென்ற்விட்ட நாம் கீழே
இறங்கிநின்று தவம் இயற்றுவதால்,
சாந்தியோகத்திற்கு இறங்குபடி தவம்
என்றும் ஒரு பெயர் உண்டு.தவக்கனலை
இறக்கிச் சாந்தி தருவதால்
சாந்தியோகம் என்று பெயர்.
.

நினைத்தவுடன் சட்டென்று
மூலாதாரத்திற்கு இறங்கிவிடும் திறன்
கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இந்த குண்டலினி யோகப் பயிற்சியின்
ஆரம்ப காலத்தில் 4லிலிருந்து 7 நாட்கள்
சாந்தியோகத்திலேயே இருக்கவேண்டும்.
.

தவிர ஆரம்ப பயிற்சியாளர்கள், ஒவ்வொரு
வேளை சாப்பாட்டிற்கு பிறகும் மூன்று
நிமிடம் இறங்குபடி கவனிக்கவெண்டும்.
இதற்கும் உட்கார்ந்து தவம் செய்ய
வேண்டுமென்பதில்லை. சாப்பிட்டு
முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை ப்
பார்த்துக்கொண்டே , நினைவை மட்டும்
மூலாதாரத்தில் வைத்திருக்கவேண்டும்.
.

.
ஆரம்ப பயிற்சியாளரும் சரி, முதிர்ந்த
பயிற்சியாளரும் சரி, ஆரத்தில் இரண்டுவேளை
(வெள்ளி காலை, மாலை) கட்டாயம்
சாந்தியோகம் மட்டுமே பயிலவேண்டும்.
அதேபோல மாதாந்திர உலக அமைதி
தற்சோதனை, மௌன நோன்பு அன்று
படுக்கப் போகும் முன் இயற்றப்படும்
கடைசிவேளைத்தவம் முழுக்க்ழ் முழுக்க இறங்குபடித்தவமாகவே இயற்றவேண்டும்.
.

வாழ்த்தும் கூட இறங்குபடியில்
நின்றே கூறவேண்டும். பஞ்சபூத
தத்துவத்தில் மண் ஆகிய பிருதிவிக்கு
உரிய ஸ்தானம் மூலாதாரம். இங்கு
நின்று தவம் ஆற்றுவதால் பூகம்ப
ஆராய்ச்சி பற்றிய அறிவு விருத்தியாகும்.
.

.
ஒரு குண்டலினி யோகி தவமியற்றி
சேமித்து வைத்துள்ள தவச்சக்தியின்
மிகுதியானது சாந்தியோகத்தின் பயனாக
உயல்சக்தியாக மாறுகிறது. அது உடல்
நலனுக்கும் நோய் எதிர்ப்புக்கும் பயன்படும்
. உடல்வலி, ஜுரம், அஜீரணம் போன்ற
சாதாரண நோய்கள் சாந்தியோகத்தால்
நீங்கும். மலச்சிக்கல் விலகும். உடலில்
உயிரின் இயக்கம் சீராகும்.
.

.
ஒரு நுட்பத்தை கவனியுங்கள் :
முன்னர் மூலாதாரத்தில் குண்டலினி
சக்தி இருப்பதாக இருந்ததற்கும்.
இப்போது சாந்தியோகத்தில் நாம்
அதே சக்தியை மூலாதாரத்தில்
தேக்கி தவம் இயற்றுதலுக்கும்
நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
அவற்றை ஆராய்வோம்
.

.
முன்னர் மயக்க நிலை, இப்போது
விழிப்புநிலை, மூலாதாரத்தில்
நின்றாலும் சாந்தியோகத்தின்போது
மனம் விழிப்பில்தான் இருக்கின்றது.
எனவெ நத்தின் சக்தி குறைந்துவிடுவது
இல்லை.ஆகவே சாந்தியோகத்தின்போது
வாழ்த்துக்கூறுதலும் பொருத்தமானதுதான்.
.

முன்னர் மூலாதாரத்தில் உயிராற்றல்
இருந்தது தெரியாது. இப்போது சாந்தியோகத்தில்
அது இருப்பது தெரிகிறது.அதன் அழுத்தமும்,
அசைவும் மனதிற்கு புலப்படுகின்றன.
அவற்றை கவனித்தன் மனதிற்கு
ஓர்மைநிலைப் பயிற்சியாகவும் (concentration)
அமைகிறது.
.

.
சாந்தியோகத்தின் காரணமாக,
தேவைக்கேற்ப உடல் சக்தியை
மனோசக்தியாகவும், மனோசக்தியை
உடல்சக்தியாகவும் மாற்றி மாற்றி
பயன்படுத்தி துய்க்கிறோம். எனவே
இதன் மதிப்பையும், உயர்வையும்
போற்றி உரியவாறு இத்தவத்தை
பயின்றுவரவேண்டும்.
.

.
வாழ்க வளமுடன்
.
-வேதாத்திரி மகரிஷி
(மனவளக்கலை பாகம்-1 என்றநூலிலிருந்து)

Tuesday, September 1, 2015

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :

ஆசைகளை முறைப்படுத்திக் கொள்வோம் :

நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள்,

நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது.


ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் ஏற்றுச் சமாளிக்க முடியாது.

சில விருப்பங்களை ஈடேறச் செய்வதற்குப் போதுமான வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை.

ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு அவை நிறைவேறாமல் போகும்போது நாம் ஏமாற்றத்தில் ஆழ்ந்து விடுவோம்.

இப்படி மனதைக் கீழ்நிலைக்குச் செல்லாமல் பக்குவப்படுத்த நம்மை தயார் செய்ய வேண்டும்.

ஆசைகளைக் குறைத்துக் கொள்வது அல்லது கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு முதல்படியாக அமையும்.

முதலில் நாம் எண்ணும் ஆசைகள் நம் நிலைக்கு பொருத்தமானவையாகவும், மனஅமைதியைக் கெடுக்காத வகையிலும் அமைவது அவசியம்.

இரண்டாவதாக நம் ஆசைகள் பிறரைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

மூன்றாவதாக இயற்கை நியதிகளை ஒட்டியதாக ஆசை இருத்தல் வேண்டும்.

இயற்கையின் ஒழுங்குக்கு மீறிய எண்ணங்கள் நிச்சயமாக நம்மைத் தண்டித்து விடும்.

இப்படி ஆசைகளை முறைப்படுத்தி விட்டால் நாம் நலமுடன் வாழலாம்.

பரலோகத்திலும் நன்மைகளைப் பெறலாம்.

--- அருள்தந்தை

வாழ்க வளமுடன்

வெற்றி பெற வழி :

வெற்றி பெற வழி :

தனக்கும் , பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் தராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும். இதுவே வேதங்கள் மற்றும் புராணங்களின் சாரம்.

ஏதோ சந்தர்ப்பவசத்தால் பிறருக்குத் துன்பம் வந்து விடுகிறது . அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை . அப்போது இயன்ற வரையில் நான் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்க்கிற போதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


ஏனென்றால் நமக்கே துன்பம் வந்து , நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும் படி கெஞ்சும் நிலை வந்துவிடக் கூடாது அல்லவா?

அந்த அளவில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது . பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அவை கிடைக்கும் சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காக கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே , எந்த காலத்திலேயே, எந்த நோக்கத்தோடு , எந்த செயலை நீ எவ்வளவு திறமையாக செய்கிறாயோ அதற்குத் தகுந்தவாறே விளையும் வரும். வெற்றியும் வரும் .

---அருள்தந்தை

வாழ்க வளமுடன்