Tuesday, July 7, 2015

மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)



மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட
------------------------------------------------------------------------
குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)
-------------------------------------------------------------
.
"உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன். இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலம் குன்றியிருக்கின்றது. இதை மூட நிலை எனலாம். 'மூடம்' என்றால் 'மறைவு' என்று பொருள். அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல், அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைப்பட்டிருக்கும் நிலையாகும். இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப் பயிற்சியின்றி முடியவே முடியாது.
.
ஏனெனில், தவறிழைப்பதும் மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுகவேண்டியதும் மனமே. மனதை பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்வது எப்படி முடியும் ? முடியாது; மனம் தான் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மெய்ப்பொருள் உணர்ந்த குருவின் மூலம் முறையான அகத்தவப் பயிற்சியைக் (Simplified Kundalini Yoga) கற்றுக்கொண்டு, இயற்கைத் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து, மதித்துப் போற்றி பயின்று பயன் கொள்ள வேண்டும்."

"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திர்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வதுதான் "ஞானம்".
.
"கர்மம் = செயல் அல்லது வினை. யோகம் = ஒன்றுபடுதல்".
.
"நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை வந்துவிடும்"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment