Tuesday, July 7, 2015

" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட --- குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".



" நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூட
-------------------------------------------------------------------------
குண்டலினி யோகத்தில் - 'துரியாதீத தவத்தால்' போகும்".
------------------------------------------------------------------------------------------


.
"ஜீவகாந்தத்தின் விளைவுதான் மனம். மனம் தன் மூலத்தை அறிவதற்காகவே, அடைவதற்காகவே, விரிகிறது. விரிந்து விரிந்து நிற்கிறது. அனுபோக உணர்ச்சிகளில் இருக்கும் மனதிற்கு வழி தெரியவில்லை; வேகமோ குறையவில்லை; ஆகவே எங்கெங்கோ சென்று நிற்கிறது. எது எதிலேயோ சிக்கிக் கொள்கிறது, துன்புறுகிறது. ஆனால், தன் லட்சியத்தை அடையும் வரை மனதின் விரியும் முயற்சி சோர்வடைவதில்லை. மெய்ப்பொருளை உணர்ந்த பிறகுதான் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. அதுவரை அமைதி கிடைப்பதேயில்லை.

.
தன் மூலத்தை (ஆதி நிலை) அறிய எழுந்த வேகம் திசை தப்பி நிற்கும் அளவிற்கு அமைதியின்மையின் அளவும், துன்பத்தின் அளவும் இருக்கும். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition and Dissolution ) என்று கருமப் பதிவுகளைப் (Sins and Imprints) போக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதை நான் பலமுறை விளக்கியுள்ளேன்.

.
அவற்றில் கடைசியான தேயத்தழித்தல் ( Dissolution ) என்பது தவத்தினால் ( Simplified Kundalini Yoga ) தான் சாத்தியமாகும்.

.
ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும்.

.
துரியநிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும்.

.
துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும்.

.
நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் 'துரியாதீத தவத்தால்' போகும். 'துரியாதீத தவம்' ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர்வியக்கத்தில் ( Mind frequency) மனம் நின்றால் பிரபஞ்ச ரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதிநிலை" (ஆதி நிலை). துரியாதீத தவத்தால் இந்நிலையில் நிலைத்து பழக்க, அறிவு அமைதியைப் பெறுகிறது.

.
துரியாதீதம் :
------------------

"தூயப் பெருநிலை துரியாதீதமோ
துயர், மகிழ் விரண்டையே துய்த்த என் அறிவை
காலம், பருமன், தூரம் விரைவெனும்
கணக்கினைக் கடந்து மெய்ப்பொருளோடு இணைத்தது;
இனிப் பழிபுரியேன் புரிந்தவை களைந்தேன்
இறைநிலை உணர்ந்தேன் இணைந்தேன் நிறைந்தேன் ;
இனி என் உடல் உயிர் ஆற்றலை முறைப்படி
இயக்கிக் கடமையை புரிவேன்."

.
சமாதி நிலை :
-------------------

"உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம்பெற்ற பல பொருள் அழித்து
உள அமைதியை இழந்து சோர்ந்தோரேனும்;
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளையறிந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருதவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் ! "

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment