Sunday, March 1, 2015

"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"



கேள்வி :-


"சுவாமிஜி, மரணத்தருவாயில் எண்ணம் எப்படி இருக்கும்?"

.


மகரிசியின் பதில்: -


" கடைசி எண்ணமானது உயிர் விடும் மனிதனின் குணத்தைப் பொருத்தது. ஆன்மீகப் பயிற்சியிலேயே சிந்தனை செய்து கொண்டிருந்தவர் மரணமுறும் போது தெய்வீக எண்ணங்களாகத் தோன்றும். சிற்றின்பப் பிரியர்களுக்குக் கடைசி நேரத்திலும் சிற்றின்பம் பற்றிய எண்ணமே தோன்றும். கடைசி எண்ணம் என்பது ஏதோ கடைசி கடைசியாகத் திடுக்கென்று வந்துவிடுவதில்லை. வாழ்நாளெல்லாம் எந்தத் தன்மையை ஒருவர் உருவாக்கிக் கொண்டாரோ அதற்கு நிகரான எண்ணமேதான் கடைசியிலும் தோன்றும்.

.


இறைநிலையடைய வேண்டும் என்று ஆசைப்படுபவர், வாழ்நாளெல்லாம் அதே முயற்சி பயிற்சியில் இருந்தால்தான் கடைசி எண்ணமும் அதே போன்று ஏற்பட்டு, அவரது வாழ்நாளின்பின் அவருக்கு இறைநிலை சித்திக்கும்.

.


அப்படியின்றி தவறான முறையில் வாழும் ஒருவருக்குக் கடைசி கடைசியாகவும் கீழான எண்ணமே தோன்றி, அவரது ஆன்மாவானது அத்தகு தன்மை கொண்ட வாழ்வோரைப் பற்றிக் கொண்டு தன் எண்ணத்தையும் ஆசையையும் அவர் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்.

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


.

********************************************************************

.


"வேதத்தின் உட்பொருளையறிய வென்றால்

விவாதத்தால் முடியாது, அறிவை ஒன்றிப்

பேதமாய்க் காணும் கற்பனைத் தோற்றங்கள்

பிறக்குமிடம் கண்டு நிற்க; வேதம் என்ற

போதனைகளில் பொதிந்த கருத்துயர்வும்

பூவுலக மாந்தர்களைப் பண்படுத்தி

நாதத்தின் மூலமென்ற மௌனம் காட்டி

நான் யார் என்றறிய வைக்கும் மார்க்கமாகும் !."

.


உயர் அறிவு:


"புலனைந்தின் துணைகொண்டு பூவுலகை அனுபவித்து

புலன் தொடர்பற்று ஆராயும் புதுமையே ஆறாம் அறிவாம் ;

புலன் கடந்த செயல் முடிவே பூர்வ நிலை அறிவறிதல்

புலன் கடந்த அவ்விடத்தே பொருத்தி வாழ்வான் ஞானி."

.


உயிர் விளக்கம் :-


" உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்

உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்

உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு

உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம் ;

உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க

உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே

உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது

உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்."

.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment